மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி: 500 மாணவர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் புதன்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த 97 மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இவர்களில் 46 பேர் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி டி.எஸ்.சவிதா முன்னிலை வகித்தார். முதல்வர் சி.சிவக்குமார் வரவேற்றார். இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், அபாகஸ் ஆசிரியர் வி.அரவிந்த், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com