ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை கணிதத் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கணிதத் துறை இணைப் பேராசிரியர் எம்.சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கணிதத் துறைத் தலைவர் ஜி.சம்புவராயன், கணிதத் துறைப் பேராசிரியர்கள் கே.ரவிக்குமார், எஸ்.தேன்மொழி, கே.சுரேஷ், பிற துறைத் தலைவர்கள் டில்லிராணி, கிருஷ்ணமூர்த்தி, அலுவலக ஊழியர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.