மைசூருவில் கொத்தடிமைகளாக இருந்த 6 பேர் மீட்பு

கர்நாடக மாநிலம், மைசூரு அருகே கொத்தடிமைகளாக இருந்த கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 6 பேர் மீட்கப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், மைசூரு அருகே கொத்தடிமைகளாக இருந்த கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 6 பேர் மீட்கப்பட்டனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த பழங்கோயில் கிராமத்தைச்சேர்ந்தவர் ரஜினி (32). இவரது மனைவி சரோஜா (29). இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், வள்ளி என்ற மகளும் உள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்தவர் ரஜினியின் அண்ணன் முருகன் (35). கலசப்பாக்கத்தை அடுத்த பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பா (30). பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம், மைசூருவை அடுத்த மரகவுடனஹல்லி கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்தனர்.
தகவலறிந்த மைசூரு மாவட்ட வருவாய்த் துறையினர் 6 பேரையும் மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இவர்களிடம் திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com