கர்நாடகத்தில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றதால், ஆரணியில் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஆரணி பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமையில், அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்தது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், நிர்வாகிகள் எஸ்.கோவிந்தராஜ், கே.ஜெ.கோபால், அலமேலு, எஸ்.வேலு, ஏகாம்பரம், மாரிமுத்து, கே.ஜெ.தருமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.