டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி குறித்து செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான அரசு, தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் சுப்பிரமணியன், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பி.நடராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
இதில், பூதேரி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.