சேத்துப்பட்டு பேரூராட்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வாக்குச்சாவடி குழு அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை தலைமைவகித்து பேசியதாவது: மக்களவை, சட்டப் பேரவை, உள்ளாட்சி என எந்தத் தேர்தல் வந்தாலும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உதவ வேண்டும். மேலும், கிராமம், நகரம், வார்டு வாரியாக வாச்சாவடி குழுக்களில் பெண்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பழகன், அருணகிரி, பன்னீர்செல்வம், தசரதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், ஜெயராமன் மற்றும் வட்டார, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.