போளூர் வருவாய்த் துறை சார்பில், உலக பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
போளூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை வட்டாட்சியர் தியாகராஜன் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இதில், காவல் உதவி ஆய்வாளர் தயாளன், மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் மயிலரசன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.