ஆரணி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆரணி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க புதிய நிர்வாகிகளின் தேர்தல் முடிந்து புதிய தலைவராக ஜி.வி.கஜேந்திரன், துணைத் தலைவராக பி.மஞ்சுளா, இயக்குநர்களாக எம்.பலுராமன், கே.விநாயகம், எம்.லதா, டி.சாந்தா, எஸ்.அம்மு, சி.கே.ராஜா, பி.துரை, பி.சேட்டு, ஏ.ஆர்.கே.பொன்னிபாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டனர்.
தேர்தல் அதிகாரியாக ராஜேந்திரன் செயல்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உடன், செயலர் ஜெகதீசன், அதிமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் க.சங்கர், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர் உள்ளிட்டோர் இருந்தனர்.