தமுஎகச சார்பில்  கருத்துரிமை கருத்தரங்கம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், கருத்துரிமை கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், கருத்துரிமை கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கவிஞர் ஆரிசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு.பாலாஜி வரவேற்றார். "பாசிசத்தின் வரலாறு' என்ற தலைப்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர், பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆதவன் தீட்சன்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
கருத்தரங்கில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் களப்பிரன், வெண்புறா சரவணன், கவிஞர் தனிக்கொடி, கிளைச் செயலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com