பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

வந்தவாசி பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 8 பள்ளிகளைச் சேர்ந்த 2,755 மாணவர்களுக்கும், தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 3 பள்ளிகளைச் சேர்ந்த 619 மாணவர்களுக்கும், தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 5 பள்ளிகளைச் சேர்ந்த 933 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. வெ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
விழாவில், அதிமுக நிர்வாகிகள் டி.கே.பி.மணி, சி.சீனிவாசன், கே.பாஸ்கர் ரெட்டியார், வி.தங்கராஜ், டி.வி.பச்சையப்பன், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியன் (வந்தவாசி), செந்தில்குமார் (தெள்ளாறு), ரவிச்சந்திரன் (தேசூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com