வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் சார்பில், படை வீரர் கொடி நாள் ஊர்வலம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.அரிக்குமார் தலைமை வகித்து, ஊர்வலத்தை தொடக்கிவைத்தார். துணை வட்டாட்சியர்கள் சரவணன், அகத்தீஸ்வரன், குமரவேல், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், பஜார் வீதி, தேரடி, திண்டிவனம் சாலை வழியாக வந்தவாசி ஐந்து கண் பாலம் வரை சென்றது.