ஆரணியைச் சேர்ந்த எழுத்தாளருக்கு சக்தி எக்ஸ்னோரா சார்பில் இலக்கியச் சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை சக்தி எக்ஸ்னோரா சார்பில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஆரணியைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா நந்தகுமாருக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.