மண்டல அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத்
தகுதி பெற்றனர்.
வேலூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றன. இந்த போட்டியில், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் நடைபெற்ற கபடிப் போட்டியில் கலந்து கொண்ட பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பெற்றனர்.
இதையடுத்து, வருகிற
29 - ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடிப் போட்டியில் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பாராட்டு: இதனிடையே, பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான கபடிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பள்ளி மாணவர்களையும், பயிற்சி அளித்த உடல் கல்வி இயக்குநர் கு.ஜெகநாதன், உடல் கல்வி ஆசிரியர் முருகன் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.ஆயப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.