தச்சூரில் ரூ.3.92 கோடியில் துணை மின் நிலையம் திறப்பு

ஆரணியை அடுத்த தச்சூரில் ரூ.3.92 கோடியிலான துணை மின் நிலையத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

ஆரணியை அடுத்த தச்சூரில் ரூ.3.92 கோடியிலான துணை மின் நிலையத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மின் நிலையத்தை இயக்கி தொடக்கி வைத்ததுடன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் 
பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, எ.அசோக்குமார், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜோதிலிங்கம், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com