ஆரணி நகரில் அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன் கட்சியினருடன் சென்று செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அருந்ததிபாளையம் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய ஜி.செந்தமிழன், காமராஜர் சிலை, காந்தி சாலை, பெரியகடை வீதி, மண்டி வீதி, சத்தியமூர்த்தி சாலை, அருணகிரிசத்திரம், கொசப்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, மாவட்டச் செயலர் மா.வி.வரதராஜன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் பையூர் ஏ.சந்தானம், நகரச் செயலர் வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள்
உடனிருந்தனர்.