செங்கம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக புதுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், அந்தப் பெண் புதுப்பாளையம் ஒன்றியம், கொ.புதுப்பட்டு கண்ணன் மகள் கங்கா (30) என்பது தெரிய வந்தது. மேலும், விழுப்புரம் மாவட்டம், எஸ்.வி.நகரைச் சேர்ந்த குமரவேலுவுக்கும் (35), கங்காவுக்கும் தொடர்பிருந்ததும், இருவரும் கடந்த 3-ஆம் தேதி இரவு புதூர் செங்கம் பகுதியில் சந்தித்த போது ஏற்பட்ட தகராறில், கங்காவை குமரவேல் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, குமரவேலை புதுப்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.