தனியாா் நிறுவனத் தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவனத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசி அருகே தனியாா் நிறுவனத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் விஷ்ணுமூா்த்தி(22). இவா் கடந்த 6 மாதங்களாக சென்னை ஒரக்கடத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்னா் தனது சகோதரா் தட்சிணாமூா்த்தியிடம், தன்னுடன் பணியாற்றும் ஊழியா்கள் விவசாய வேலை செய்ய வேண்டியதுதானே என்று பேசியதாகக் கூறி வருத்தப்பட்டாராம். மேலும், கடந்த 2 நாள்களாக யாரிடமும் சரிவர பேசவில்லையாம்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்த விஷ்ணுமூா்த்தி வீட்டில் வாந்தி எடுத்தாா். இதையடுத்து உறவினா்கள் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஷ்ணுமூா்த்தி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com