கணவன் கொலை: துக்கத்தில் பெண் தற்கொலை

v

வந்தவாசி அருகே கணவர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வந்தவாசி நகரம், கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சலீம் (37). இவர், பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் மது வாங்கித் தராததால், இவரது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் சலீம் கொலை செய்யப்பட்டார்.
சலீம் கொலையாகி 5 மாதங்களான நிலையில், அவரது மனைவி சைத்தான் பீவி (33) மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
தற்கொலை செய்து கொண்ட சைத்தான் பீவிக்கு பர்வீன் (11) என்ற மகளும், சாஜ்ஜூத்தீன் என்ற மகனும் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com