அதிமுகவினருக்கு பொங்கல் பரிசு: அமைச்சர் வழங்கினார்

ஆரணி தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினருக்கு திங்கள்கிழமை பொங்கல் பரிசுகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆரணி தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினருக்கு திங்கள்கிழமை பொங்கல் பரிசுகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
 ஆரணி ஒன்றிய அதிமுகவினருக்கு சேவூரிலும், மேற்கு ஆரணி ஒன்றிய அதிமுகவினருக்கு குண்ணத்தூரிலும், ஆரணி நகர அதிமுகவினருக்கு சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்திலும் பொங்கல் பரிசாக வேட்டி, சேலை, நாள்காட்டி உள்ளிட்டவற்றை 15,100 பேருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
 நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி. செஞ்சி வெ.ஏழுமலை, அரசு வழக்குரைஞர் சங்கர், வேலூர் ஆவின் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரிபாபு, நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com