காவல் நண்பர்கள் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் காவல் துறையுடன் காவல் நண்பர்கள் குழுவினர்கள் இணைந்து

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் காவல் துறையுடன் காவல் நண்பர்கள் குழுவினர்கள் இணைந்து இரவுக் காவல் ரோந்து பாதுபாப்புப் பணியில் ஈடுபடுவது குறித்த ஆலோசனைக் கூட்டமும், காவல் நண்பர்கள் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு விழாவும் அண்மையில் நடைபெற்றன.
விழாவுக்கு காவல் நண்பர்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மங்கலம் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இ.இளையராஜா, ஆர்.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் நண்பர்கள் குழு நிர்வாகி ஏ.கதிரவன் வரவேற்றார். காவல் துறையுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்ட காவல் நண்பர்கள் குழு உறுப்பினர்களுக்கு மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எம்.சத்யாநந்தன் சீருடை, அடையாள அட்டை, சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆர்.கோவிந்தன், கே.மனோகரன், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கே.பாண்டுரங்கன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் டி.பிரகாசம், வி.வெங்கடேசன், தலைமைக் காவலர் சி.கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com