மேலப்புஞ்சை கிராமத்தில் ஸ்ரீசீனுவாசப் பெருமாள் வீதியுலா

செங்கம் அருகே மேலப்புஞ்சை கிராமத்தில் ஸ்ரீசீனுவாசப் பெருமாள் புதன்கிழமை இரவு வீதியுலா வந்தார்.

செங்கம் அருகே மேலப்புஞ்சை கிராமத்தில் ஸ்ரீசீனுவாசப் பெருமாள் புதன்கிழமை இரவு வீதியுலா வந்தார்.
மேலப்புஞ்சை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசீனுவாசப் பெருமாள் கோயிலில் தை மாதப் பிறப்பையொட்டி, செவ்வாய்க்கிழமை கோ பூஜை, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாட்டுப் பொங்கல் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோயிலில் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். இரவு உத்ஸவர் ஸ்ரீசீனுவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமியை வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட யாதவர் மடத்தின் தலைவர் சீனுவாசன் மற்றும் விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com