திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் வாரிசுகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சீ.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்தம் வாரிசுகள் பலர் கலந்து கொண்டனர். இவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியர் பெற்று விசாரணை மேற்கொண்டார்.
இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.