வந்தவாசி அருகே தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (26). இவரது மனைவி மணிமேகலை (21). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமாகிறது. இந்த நிலையில், சிவா வியாழக்கிழமை தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, சிவா வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் வேலு அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.