வந்தவாசி நகரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வந்தவாசி நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட வந்தவாசி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சந்நிதி பள்ளி, ஆர்.சி.எம். பள்ளி, சி.எஸ்.ஐ. பள்ளி, கிழக்கு, வடக்கு தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் 25 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த வாக்குச் சாவடி மையங்களில் கட்டடம், மின்சாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி ஆய்வு மேற்கொண்டார். மேலும், தேவைப்படும் அத்தியாவசிய வசதிகளை உடனடியாக செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் மணி, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.