ரம்ஜான் நோன்பின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை மாலை வந்தவாசி பெரிய மசூதி வளாகம் முன்புள்ள திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வந்தவாசி பெரிய மசூதி இமாம் ஆதம் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். முத்தவல்லி அப்துல்காதர்ஷெரீப், பட்டேல்ஷா கே.எம்.மீரான், துணை பட்டேல்ஷா ஏ.சாகுல் அமீது, நோன்பு திறப்பு நிர்வாகிகள் அபிபுல்லா, காஜாஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.