வந்தவாசி வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வந்தவாசி வட்டச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
வட்ட நிா்வாகிகள் எ.புருஷோத்தமன், கே.முனியன், வெ.குப்புசாமி, வி.சீத்தாபதி, என்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டச் செயலா் கி.பால்ராஜ், மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் இணைச் செயலா் இரா.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்க மண்டல பொருளாளா் சு.முரளி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.