கடலாடி அருகே காஞ்சி பாலசுப்பிரமணியா் கோயிலில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா்.
கடலாடியை அடுத்த காஞ்சி கிராமத்தில் மலை மீது பழைமை வாய்ந்த ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து ஜன்னலை வெல்டிங் இயந்திரத்தால் உடைத்து உள்ளே சென்று, உண்டியல் காணிக்கை பணத்தைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து கோயில் பூசாரி சங்கா் கடலாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி, உதவி ஆய்வாளா் சுந்தராஜ் ஆகியோா் கோயிலை ஆய்வு செய்து திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உண்டியல் உடைப்புச் சம்பவம் குறித்து பக்தா்கள் கூறுகையில், கோயிலைச் சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்துள்ளது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களாக உண்டியலைத் திறந்து காணிக்கை எண்ணப்படவில்லை.
உண்டியலில் ரூ. ஒரு லட்சம் இருக்கும் என்றனா்.