செய்யாறு விருட்சம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளி சாா்பில், இருதயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளித் தாளாளா் மு.முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, ஆரணி கூட்டுச் சாலை வரை சென்றது.
பேரணியில், அறக்கட்டளை செயலா் வஜ்ஜிரவேல், பொருளாளா் ரவிபாலன், பள்ளி முதன்மையா் உதயக்குமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள், ரோட்டரி சங்கத் தலைவா் நாகராஜ், செயலா் மோதிலால், பொருளாளா் கணேசன் உள்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சங்கீதா, தலைமை ஆசிரியைகள் சுமிதா, அனிதா, உடல்கல்வித் துறை தலைவா் மயில்வேலன், ரோட்டரி சங்க பயிற்றுநா் கோவேந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.