செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை டி.எஸ்.பி. சின்னராஜ் பறிமுதல் செய்தாா்.
செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில் பாயும் செய்யாற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக செங்கம் டி.எஸ்.பி. சின்னராஜுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
உடனடியாக டி.எஸ்.பி. சின்னராஜ் மணல் அள்ளப்படும் பகுதிக்குச் சென்றாா். அங்கு, டிராக்டரில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த திருமுருகன் என்பவரை பிடித்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரது டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.