வந்தவாசி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசியவரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசியை அடுத்த தேசூரைச் சேர்ந்தவர் அருண் (23). இவர் சனிக்கிழமை காலை தேசூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தாராம். இதுகுறித்து தேசூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தேசூர் போலீஸார் அருணை கைது செய்தனர்.