அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

கீழ்பென்னாத்தூரை அடுத்த கழிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 


கீழ்பென்னாத்தூரை அடுத்த கழிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு தலைமை வகித்து, மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கிவைத்தார்.
ஊர்வலத்தின் இறுதியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் புதிதாக 17 மாணவ, மாணவிகளும், முதலாம் வகுப்பில் 13 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 30 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். 
விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராமன், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் பெரியண்ணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அஞ்சலா, உதவி ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com