தமிழியக்கம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தமிழியக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தமிழியக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்டச் செயலர் மா.சின்ராஜ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் அப்துல்காதர், தமிழ்ச்செம்மல் வே.பதுமனார், சுகுமாறன், பேராசிரியர் வணங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் லதா பிரபுலிங்கம் வரவேற்றார்.
கூட்டத்தில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் மாபெரும் விழா நடத்துவது. விழாவில், தமிழியக்க நிறுவனர் தலைவரும்  விஐடி வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது. 
புதுவை முதல்வர் நாராயணசாமி, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் சூட்டுவது பற்றிய புத்தகத்தை வெளியிடுவது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஆசிரியர் தா.சம்பத், எழுத்தாளர் ந.சண்முகம், புலவர் கோவிந்தசாமி, தாமோதரன், பேராசிரியர் சு.பச்சையம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com