தேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து ஆக. 17-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரை மக்களிடம் தொடர் பிரசாரம் செய்வது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் எம்.கே.மேத்தாரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலர் கி.ஏழுமலை வரவேற்றார்.
ஒன்றியச் செயலர்கள் ம.ச.அசோக், ப.துரை, எ.லட்சுமணன், அ.ஞானப்பிரகாசம், த.சீனுவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
தொல்.திருமாவளவனின் பிறந்த நாளான ஆக. 17-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள்
உள்ளிட்டவை வழங்குவது, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோ.சீனுகுமார் நன்றி தெரிவித்தார்.