வந்தவாசியை அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கு.அரிக்குமார் வரவேற்றார்.
தெலங்கானா மாநில டி ஸ்மார்ட் சிஸ்டம் நிறுவன பொது மேலாளர் பிரின்ஸ் விஜய், சென்னை ரைட் பிட்ச் நிறுவன தலைமை அலுவலர் எம்.ஏ.ஜான் ஆகியோர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
கல்லூரி இயக்குநர்கள் எஸ்.அப்பாண்டைராஜன், மணி, சிவசங்கரன், ஆனந்த், டி.டி.ராதா, கல்லூரி துணை முதல்வர் இரா.ஏழுமலை, கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டல் குழு பேராசிரியர்கள்
எஸ்.ராஜேஷ்குமார், ஜார்ஜினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.