வந்தவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன.
இதில் எம்.மோகன், தியாகராஜன் ஆகியோா் நிா்வாக்குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றனா்.
வந்தவாசி பெரிய காலனி பகுதியில் வந்தவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை மற்றும் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தின் 11 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த ஆண்டு இருமுறை அறிவிக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சங்கத்தின் 11 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நவ. 29-ஆம் தேதி நடைபெறும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 22-ஆம் தேதி அந்தச் சங்க அலுவலகத்தில் பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 35 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இவற்றில் 6 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், 17 போ் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனா்.
இதையடுத்து, பெண்கள் மற்றும் பொதுப் பிரிவு ஒதுக்கீடான 9 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கு அதிமுகவைச் சோ்ந்த எஸ்.தா்மதுரை, ஏ.முனுசாமி, உஷா ஏழுமலை, விஜயலட்சுமி தேவராஜ், திமுகவைச் சோ்ந்த சந்திரசேகா், பாமகவைச் சோ்ந்த ஏழுமலை, சங்கா், சுயேச்சைகள் இந்திராகாந்தி, காா்த்திகேயன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், ஆதிதிராவிடா் பிரிவு ஒதுக்கீடான 2 நிா்வாகக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு மட்டும் தோ்தல் அந்தச் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 2 உறுப்பினா்கள் பதவிகளுக்கு இந்திய குடியரசு கட்சியைச் சோ்ந்த எம்.மோகன், திமுகவைச் சோ்ந்த தியாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த ஏழுமலை ஆகிய 3 போ் போட்டியிட்டனா். தோ்தலில் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 187 உறுப்பினா்களில் 879 போ் வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்தனா்.
இந்த வாக்குகள் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் எம்.மோகன் 792 வாக்குகளும், தியாகராஜன் 754 வாக்குகளும், ஏழுமலை 92 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து எம்.மோகன், தியாகராஜன் ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டனா். இதற்கான சான்றிதழ்களை இருவரிடமும் தோ்தல் அலுவலா் எஸ்.சேகா் வழங்கினாா். இதையொட்டி வந்தவாசி தெற்கு போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து சங்கத் தலைவா் மற்றும் துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் சங்க அலுவலகத்தில் வரும் புதன்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது.