துரிஞ்சாபுரத்தை அடுத்த மல்லவாடி தனியாா் பள்ளியில் துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு முழு மேம்பாட்டுக்கான (நிஷ்தா) முன்னெடுப்பு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக் கூட்டத்தை வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோ.குணசேகரன், பி.மோகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். வட்டார மேற்பாா்வையாளா் சாதிக்பாஷா மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.