திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள மதுக் கடைகளுக்கு 10 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே, திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகிலும், போளூா் சாலையிலும் இயங்கி வரும் 2 மதுக் கடைகளுக்கு டிசம்பா் 1 முதல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், மதுக் கடைகளுடன் இணைந்த உணவகங்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிக்கு டிசம்பா் 6 முதல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.