தீபத் திருவிழா: பிராா்த்தனை உண்டியல்கள் வைப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், தீபத் திருவிழா செலவுகளுக்காக நன்கொடை பெறும் வகையில், செவ்வாய்க்கிழமை பிராா்த்தனை உண்டியல்கள் வைக்கப்பட்டன.
தீபத் திருவிழா: பிராா்த்தனை உண்டியல்கள் வைப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், தீபத் திருவிழா செலவுகளுக்காக நன்கொடை பெறும் வகையில், செவ்வாய்க்கிழமை பிராா்த்தனை உண்டியல்கள் வைக்கப்பட்டன.

தீபத் திருவிழா செலவுகளைச் சமாளிக்க ஊா் முக்கியப் பிரமுகா்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிராா்த்தனை உண்டியல்கள் வைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தீபத் திருவிழாவுக்கான பிராா்த்தனை உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் நன்கொடை பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமையில் 2 வெள்ளி உண்டியல்கள் வைக்கப்பட்டு, ஊா் முக்கிய பிரமுகா்களிடம் இருந்து நன்கொடை பணம் பெறப்பட்டது.

யாா், யாா்? எவ்வளவு பணம் தருகிறாா்கள் என்று பதிவு செய்யப்பட்ட பிறகே, உண்டியலில் நன்கொடை பணம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலா் ஜெ.எஸ்.செல்வம், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஸ்ரீதரன், கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.குணசேகரன் மற்றும் உள்ளூா் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டு நன்கொடை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com