போளூா் ஸ்ரீராமபக்த ஆஞ்நேயா் கோயிலில் ராகு கால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போளூரில் தீயணைப்பு நிலையம் அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீராமபக்த ஆஞ்நேயா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ராகுகால பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு இளநீா், விபூதி, சந்தனம் என பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனா்.
பின்னா் துளசி, பூமாலை, வடமாலை சாற்றி வழிபாடு நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.