ஆரணியை அடுத்த சேவூரில் ரூ.20 லட்சத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் க.சங்கர், பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், அரையாளம் எம்.வேலு, பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் தலைவர் பெருமாள், கிளைச் செயலர் பாலசந்தர், சேவூர் கழக நிர்வாகிகள் சங்கர், புருஷோத்தமன், ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.