கட்டட மேற்பார்வையாளரை தாக்கிய தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

முன் விரோதத் தகராறில் கட்டட மேற்பார்வையாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளிக்கு ஓராண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து செய்யாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முன் விரோதத் தகராறில் கட்டட மேற்பார்வையாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளிக்கு ஓராண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து செய்யாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செய்யாறு கிடங்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் (38). கட்டட மேற்பார்வையாளரான இவரை அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரகாஷ் (36) முன் விரோதம் காரணமாக கடந்த 18.1.2012 அன்று கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ஆனந்தனின் மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுந்தரபாண்டியன் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், பிரகாஷுக்கு ஓராண்டு 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com