குண்ணத்தூரில் பெட்டிக் கடைக்கு தீ வைப்பு

ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் பெட்டிக் கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ.50 ஆயிரத்திலான பொருள்கள் சேதமடைந்தன.


ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் பெட்டிக் கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ.50 ஆயிரத்திலான பொருள்கள் சேதமடைந்தன.
ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் கண்ணன் மகன் மணி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது பெட்டிக் கடைக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு சிலர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அப்போது, அவர்கள் பெட்டிக்கடை மீது தீ வைத்தனராம். இதனால், கடையில் இருந்த ரூ.50 ஆயிரத்திலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து மணி அளித்த புகாரின்பேரில், பெட்டிக் கடை மீது தீ வைத்ததாகக் கருதப்படும் சிலரை பிடித்து ஆரணி கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com