ஆரணியை அடுத்த 12புத்தூர் கிராமச் சாலையில் உள்ள சிறுபாலத்தின் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.
ஆரணியை அடுத்த 12புத்தூர் கிராமத்திலிருந்து முள்ளண்டிரம் செல்லும் சாலையில் உள்ள சிறுபாலத்தின் அருகே அழுகிய நிலையில் சுமார் 45 வயதுடைய ஆண் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில், ஆரணி கிராமிய போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.