வந்தவாசியை அடுத்த தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை மைலாப்பூர் நந்தலாலா மருத்துவ சேவை அமைப்பு ஆகியவை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் தெள்ளாறை அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் எஸ்.வேமன்னா முகாமைத் தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஆர்.ஹரிஹரன் வரவேற்றார்.
மருத்துவர் டி.தனசேகர் தலைமையிலான குழுவினர் இதய நோய், தோல் நோய், கண் நோய், சுவாச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் மொத்தம் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கல்லூரி நிர்வாகிகள் டி.கே.பி.மணி, வி.ரகுராம், டி.பெருமாள் ரெட்டியார், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ரஷ்யராஜ், ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.