திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (60). இவர், ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், திங்கள்கிழமை காலை இறந்தார்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.