தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த மேல்பாதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த மேல்பாதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.குலசேகரன் தலைமை வகித்தார். வந்தவாசி செஞ்சிலுவைச் சங்கச் செயலர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.  ஆசிரியர் ஆர்.முருகேசன் வரவேற்றார்.
 ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பெ.ஏழுமலை தமிழ் இலக்கிய மன்றத்தைத் தொடக்கிவைத்தார். மேலும், தமிழின் பெருமைகள் குறித்து அவர் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். விழாவில் கற்க கசடற கல்விசார் குழு நிர்வாகிகள் கேசவன், சதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் ஆர்.தண்டபாணி நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com