கலசப்பாக்கத்தை அருகே எட்டு வழிச் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எட்டு வழிச் சாலை அமைத்தே தீருவோம் எனக் கூறினார். இதைக் கண்டித்து கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு கிராமம் அருகே எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமன் தலைமையில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.