செங்கம் அருகே குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் அந்தனூர்-மேல்ராவந்தவாடி சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தனூரில் இருந்து மேல்ராவந்தவாடி வரை செல்லும் சாலையின் இருபுறமும் முள்புதர்கள் மண்டியுள்ளன.
இதனால் அப்பகுதியில் செல்லும் பேருந்துகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாக நிலை உள்ளது.
மேலும், நகரப் பேருந்துகள் இயக்க முடியாத நிலை நீடிக்கிறது. தற்போது சாலையை சரிசெய்தால் மட்டும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் இயக்கமுடியும். மேலும், இந்தச் சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேலம் செல்கின்றன. இதனால் கிராமங்களில் இருந்து நகரத்துக்குச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை
சீரமைக்க வேண்டும் என அப்பகுதி
மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.