தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் ஆரணி இ.எஸ்.பி. எலக்ட்ரிகல்ஸ், ஹோம் அப்ளையன்சஸ் விற்பனையகம் சார்பில், கோடைவெயிலின் தாகம் தணிக்க பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
ஆரணி அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தாகம் தணிப்போம் நிகழ்ச்சிக்கு இ.எஸ்.பி. எலக்ட்ரிகல்ஸ், ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் ஸ்டீல் குழுமத் தலைவர் இ.சலீம்பேக் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் எஸ்.ஆரிப்பேக், எஸ்.ஆஸிப்பேக் ஆகியோர் பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
மேலும், தினமணி ஊழியர்களும் கலந்துகொண்டு குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்தனர். இதைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.