டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

வந்தவாசி ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அண்மையில் தொடங்கின.

வந்தவாசி ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அண்மையில் தொடங்கின.
 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மாற்றம் கல்வி மையம் ஆகியவை சார்பில் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி
 ஆரிசன் தலைமை வகித்தார். மாற்றம் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சிவராமன் வரவேற்றார். ஆர்.சி.எம். பள்ளியின் தாளாளர் பன்னீர்செல்வம் பயிற்சி வகுப்புகளை தொடக்கிவைத்துப் பேசினார்.
 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், பிரபு, எழுத்தாளர் பூங்குயில் சிவகுமார், பயிற்றுநர்கள் ம.மகாலட்சுமி, பிரபாகரன், திருமலை, சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்த பயிற்சி வகுப்புகள் வரும் செப். 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாரம்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com